தைப் பார்த்தால் தான், சாப்ளினின் புத்திசாலித்தனம் புரியும். அதுவரை நகைச்சுவையாய் விளையாடிக் கொண்டிருந்த கோமாளிக் கதாநாயகன், படத்தின் இறுதிப் பகுதியில், தாங்க முடியாத சோகத்தில் தனக்குள் சுருள்கிற போது, ரசிகர்கள் அவனுடைய ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டு, அவனுக்காக அழுதார்கள். ஆனால், அடுத்த காட்சியில், அவன் தன்னுடைய ஏமாற்றத்தைத் துடைத்துக் கொண்டு, 'வாழ்க்கை அப்படிதான்' என்னும் விதமாய்த் தோள்களைக் குலுக்கியபடி, ஒரு நீண்ட சாலையில், தன்னந்தனியே நடந்து செல்கிறான்.
இப்படியொரு கவித்துவமான இறுதிக் காட்சி, இந்தப் படத்தின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தி விடுகிறது ! இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த சாப்ளினின் எல்லாப் படங்களிலும், இதுபோன்ற சிறப்பான பல காட்சிகளைப் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், 'காமெடியன்' என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு நல்ல இயக்குனராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றார் சாப்ளின்.
'எஸ்னே'வில் சார்லி சாப்ளினுக்குக் கிடைத்த ஒரு பெரிய அதிர்ஷ்டம் - அந்த நிறுவனத்தின் விளம்பர உத்திகள் மிகச் சிறப்பாய் இருந்தன. சாப்ளினின் படங்களை அமெரிக்காவின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று, அவருடைய திறமைகளைக் கச்சிதமாய்ச் சந்தைப் படுத்தி, மிக நல்ல முறையில் வியாபாரம் செய்தார்கள். இதனால், சார்லி சாப்ளினுக்குப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அவருடைய திரைப்படங்கள், முன்பு எப்போதும் கண்டிராத அளவுக்கு வசூலைக் குவித்தன. இதுதவிர, சாப்ளினின் புகழ் பெற்ற 'ட்ராம்ப்' உருவத்தை, மேலும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றது 'எஸ்னே' நிறுவனம். அந்த வடிவத்திலான பொம்மைகள், புத்தகங்கள், புகைப் படங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை ஏராளமாய்த் தயாரித்து விற்பனை செய்து, அமெரிக்கக் குழந்தைகள் மனதில் சாப்ளினின் உருவத்தை அழுத்தமாய்ப் பதிய வைத்தார்கள்.
பிறகென்ன ? சாப்ளினின் புதுப் படங்கள் வெளியாகும் போதெல்லாம், 'இந்தப் படத்துக்குக் கூட்டிப் போனால் தான் ஆச்சு', என்று குழந்தைகள் அழுது, அடம் பிடிக்கலானார்கள். எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் சாப்ளினின் புகைப் படங்களைப் பார்த்துப் பழகியிருந்த பெரியவர்களும், அதே அளவு ஆவலோடு சாப்ளினின் படங்களைப் பார்க்கக் குவிந்தார்கள். 'எஸ்னே'வுக்காக, சார்லி சாப்ளின் எழுதி, இயக்கிய திரைப்படங்கள் பதினான்கு. இவற்றில் சில படங்கள், 'கீஸ்டோன்' காலத்தில் அவர் எடுத்த திரைப்படங்களின், மெருகூட்டப்பட்ட புது வடிவங்கள். மற்றவை அனைத்தும், சாப்ளினின் குறிப்பிடத்தக்க படங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியவை. ஏனெனில், ஒரு தரமான இயக்குனராக சாப்ளினின் வளர்ச்சியை, இந்தப் படங்களில் தெளிவாகப் பார்க்கலாம்.
அந்த ஆண்டு இறுதியில், சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி சாப்ளின், அவரோடு மேலாளராக இணைந்து கொண்டார். இப்போது சிட்னிக்குத் தம்பியின் திறமையில் நல்ல நம்பிக்கை வந்திருந்தது.
'அண்ணன் உடையான், படைக்கு அஞ்சான்', என்று யாரும் புதுமொழி சொல்லவில்லை. ஆனாலும், சார்லி சாப்ளினின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம். அண்ணன் சிட்னி சாப்ளினால் தான் வந்தது. சாதாரண மாற்றமில்லை. பணம் கொத்துக் கொத்தாய்க் கொட்டும் வசந்த மாற்றம் ! அந்தக் காலத்தில், சார்லி சாப்ளினின் படங்கள் எல்லாமே, மிக நன்றாய் ஓடி, தவறாமல் வெற்றியடைந்து கொண்டிருந்தன. அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், தயாரிப்புச் செலவைப் போல் பல மடங்கு லாபம் சம்பாதித்தன. என்றாலும், இந்த லாபத்தின் பெரும் பகுதி, சாப்ளினுக்கும் கிடைக்கவில்லை, அவருடைய தயாரிப்பாளருக்கும் கிடைக்கவில்லை ! சாப்ளின் படங்களை வாங்கி, விநியோகிப்பவர்களும், திரையரங்க உரிமையாளர்களும்தான் நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இதை உற்று கவனித்த சிட்னி, சார்லி சாப்ளின் படங்களுக்கான விநியோகக் கட்டண முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார். இந்த அடிப்படையில், 'எஸ்னே' நிறுவனத்துக்கு சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார் அவர்.
அதன் படி செயல்பட்ட 'எஸ்னே'வுக்கு, உடனடி பலன் - சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திலும், அவர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டாலர் வரை லாபம் கிடைத்தது ! தயாரிப்பாளருக்கு மட்டும் பணம் கிடைத்தால் போதுமா ? கடினமாய் உழைத்துப் படமெடுக்கிற சாப்ளினுக்கும் இந்த லாபத்தில் ஒரு பங்கு சேர்வது தானே நியாயம் ? - இப்படி வாதிட்ட சிட்னி சாப்ளின், 'எஸ்னே'வுடனான சார்லியின் ஒப்பந்தத்தைத் திருத்தி எழுதினார். அதன்படி, சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திற்கும், அவருக்குப் பத்தாயிரம் டாலர் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது ! பத்தாயிரம் அமெரிக்க டாலரின் இப்போதைய மதிப்பு, கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் - அப்படியானால், 90 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தக் காலத்தில், பத்தாயிரம் டாலர் என்பது எத்தனை மதிப்பு மிக்கதாய் இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
இளம் வயதில், சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்த சார்லி சாப்ளின், இப்போது அமெரிக்காவின் ப
தைப் பார்த்தால் தான், சாப்ளினின் புத்திசாலித்தனம் புரியும். அதுவரை நகைச்சுவையாய் விளையாடிக் கொண்டிருந்த கோமாளிக் கதாநாயகன், படத்தின் இறுதிப் பகுதியில், தாங்க முடியாத சோகத்தில் தனக்குள் சுருள்கிற போது, ரசிகர்கள் அவனுடைய ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டு, அவனுக்காக அழுதார்கள். ஆனால், அடுத்த காட்சியில், அவன் தன்னுடைய ஏமாற்றத்தைத் துடைத்துக் கொண்டு, 'வாழ்க்கை அப்படிதான்' என்னும் விதமாய்த் தோள்களைக் குலுக்கியபடி, ஒரு நீண்ட சாலையில், தன்னந்தனியே நடந்து செல்கிறான்.
இப்படியொரு கவித்துவமான இறுதிக் காட்சி, இந்தப் படத்தின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தி விடுகிறது ! இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த சாப்ளினின் எல்லாப் படங்களிலும், இதுபோன்ற சிறப்பான பல காட்சிகளைப் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், 'காமெடியன்' என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு நல்ல இயக்குனராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றார் சாப்ளின்.
'எஸ்னே'வில் சார்லி சாப்ளினுக்குக் கிடைத்த ஒரு பெரிய அதிர்ஷ்டம் - அந்த நிறுவனத்தின் விளம்பர உத்திகள் மிகச் சிறப்பாய் இருந்தன. சாப்ளினின் படங்களை அமெரிக்காவின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று, அவருடைய திறமைகளைக் கச்சிதமாய்ச் சந்தைப் படுத்தி, மிக நல்ல முறையில் வியாபாரம் செய்தார்கள். இதனால், சார்லி சாப்ளினுக்குப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அவருடைய திரைப்படங்கள், முன்பு எப்போதும் கண்டிராத அளவுக்கு வசூலைக் குவித்தன. இதுதவிர, சாப்ளினின் புகழ் பெற்ற 'ட்ராம்ப்' உருவத்தை, மேலும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றது 'எஸ்னே' நிறுவனம். அந்த வடிவத்திலான பொம்மைகள், புத்தகங்கள், புகைப் படங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை ஏராளமாய்த் தயாரித்து விற்பனை செய்து, அமெரிக்கக் குழந்தைகள் மனதில் சாப்ளினின் உருவத்தை அழுத்தமாய்ப் பதிய வைத்தார்கள்.
பிறகென்ன ? சாப்ளினின் புதுப் படங்கள் வெளியாகும் போதெல்லாம், 'இந்தப் படத்துக்குக் கூட்டிப் போனால் தான் ஆச்சு', என்று குழந்தைகள் அழுது, அடம் பிடிக்கலானார்கள். எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் சாப்ளினின் புகைப் படங்களைப் பார்த்துப் பழகியிருந்த பெரியவர்களும், அதே அளவு ஆவலோடு சாப்ளினின் படங்களைப் பார்க்கக் குவிந்தார்கள். 'எஸ்னே'வுக்காக, சார்லி சாப்ளின் எழுதி, இயக்கிய திரைப்படங்கள் பதினான்கு. இவற்றில் சில படங்கள், 'கீஸ்டோன்' காலத்தில் அவர் எடுத்த திரைப்படங்களின், மெருகூட்டப்பட்ட புது வடிவங்கள். மற்றவை அனைத்தும், சாப்ளினின் குறிப்பிடத்தக்க படங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியவை. ஏனெனில், ஒரு தரமான இயக்குனராக சாப்ளினின் வளர்ச்சியை, இந்தப் படங்களில் தெளிவாகப் பார்க்கலாம்.
அந்த ஆண்டு இறுதியில், சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி சாப்ளின், அவரோடு மேலாளராக இணைந்து கொண்டார். இப்போது சிட்னிக்குத் தம்பியின் திறமையில் நல்ல நம்பிக்கை வந்திருந்தது.
'அண்ணன் உடையான், படைக்கு அஞ்சான்', என்று யாரும் புதுமொழி சொல்லவில்லை. ஆனாலும், சார்லி சாப்ளினின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம். அண்ணன் சிட்னி சாப்ளினால் தான் வந்தது. சாதாரண மாற்றமில்லை. பணம் கொத்துக் கொத்தாய்க் கொட்டும் வசந்த மாற்றம் ! அந்தக் காலத்தில், சார்லி சாப்ளினின் படங்கள் எல்லாமே, மிக நன்றாய் ஓடி, தவறாமல் வெற்றியடைந்து கொண்டிருந்தன. அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், தயாரிப்புச் செலவைப் போல் பல மடங்கு லாபம் சம்பாதித்தன. என்றாலும், இந்த லாபத்தின் பெரும் பகுதி, சாப்ளினுக்கும் கிடைக்கவில்லை, அவருடைய தயாரிப்பாளருக்கும் கிடைக்கவில்லை ! சாப்ளின் படங்களை வாங்கி, விநியோகிப்பவர்களும், திரையரங்க உரிமையாளர்களும்தான் நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இதை உற்று கவனித்த சிட்னி, சார்லி சாப்ளின் படங்களுக்கான விநியோகக் கட்டண முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார். இந்த அடிப்படையில், 'எஸ்னே' நிறுவனத்துக்கு சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார் அவர்.
அதன் படி செயல்பட்ட 'எஸ்னே'வுக்கு, உடனடி பலன் - சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திலும், அவர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டாலர் வரை லாபம் கிடைத்தது ! தயாரிப்பாளருக்கு மட்டும் பணம் கிடைத்தால் போதுமா ? கடினமாய் உழைத்துப் படமெடுக்கிற சாப்ளினுக்கும் இந்த லாபத்தில் ஒரு பங்கு சேர்வது தானே நியாயம் ? - இப்படி வாதிட்ட சிட்னி சாப்ளின், 'எஸ்னே'வுடனான சார்லியின் ஒப்பந்தத்தைத் திருத்தி எழுதினார். அதன்படி, சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திற்கும், அவருக்குப் பத்தாயிரம் டாலர் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது ! பத்தாயிரம் அமெரிக்க டாலரின் இப்போதைய மதிப்பு, கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் - அப்படியானால், 90 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தக் காலத்தில், பத்தாயிரம் டாலர் என்பது எத்தனை மதிப்பு மிக்கதாய் இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
இளம் வயதில், சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்த சார்லி சாப்ளின், இப்போது அமெரிக்காவின் ப